states

ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரித்திடுக!

புதுதில்லி, மே 7- ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறு வரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறு வரையறை ஆணையத்தின் பரிந்து ரைகள் அப்பட்டமாகவே அநீதியா னதும், நியாயமற்றதுமாகும். இந்த ஆணையமானது ஜம்முவில் ஆறு இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறும் அதே சமயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஓர் இடத்தை  மட்டுமே அதிகரித்திடப் பரிந்துரைத் துள்ளது. ஆணையமானது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளுக்கான எல்லைகளை மறுவரையறை செய்தி டப் பரிசீலனை செய்திருக்கிறது. இது போன்ற சமயங்களில் மக்கள் தொகை மிகவும் முக்கியமான ஒன்றா கும். காஷ்மீரின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அங்கே 68.9 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் ஜம்முவில் 53.8 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ஆணையம், காஷ்மீருக்கு 47  இடங்களையும், ஜம்முவுக்கு 43 இடங் களையும் பரிந்துரைத்திருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நியாயமான மறுவரையறை செய்யப் பட்டால், காஷ்மீருக்கு 51 இடங்க ளும், ஜம்முவுக்கு 39 இடங்களும் அளிக்கப்பட வேண்டும். 44 சதவீதம் மக்கள் தொகை உள்ள ஜம்முவுக்கு 48 சதவீத இடங்களும், 56 சதவீத மக்கள் தொகை கொண்ட காஷ்மீரு க்கு வெறும் 52 சதவீத இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்தப் பரிந்துரை கள் ஜம்மு-காஷ்மீரின் மக்கள் தொகை குணாம்சத்தை மாற்றிய மைத்திடக்கூடிய விதத்தில், அரசியல் ரீதியாக உள்நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது.     எனவே, இந்தப் பரிந்துரைகள் நிராக ரிக்கப்பட வேண்டும் என்று அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.