states

ரூ. 4 கோடி விவகாரம் பாஜக பொருளாளருக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

சென்னை, ஜூலை 5- மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஜூலை 11 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே கோவையில் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது என எஸ்.ஆர். சேகர் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், ‘விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம்?; ஏற்கனவே அமைப்புச் செயலாளரும் ஆஜராகி இருக்கிறார்’ என அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, எஸ்.ஆர். சேகர் ஆஜராக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

;