பஞ்சாப்பில் காலி ஆகிறது பாஜக
பஞ்சாப் மாநிலத்தில் பெயரளவுக்கு கட்சி நடத்தி வரும் பாஜக, அம்மாநிலத்தில் உள்ளூர் கட்சியாகவே உள்ளது. இந்நிலையில், வியாழனன்று 4 முக்கிய தலைவர்களை கட்சியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது. நீக்கம் தொடர்பாக எவ்வித விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிமிஷா மேத்தா, தல்விந்தர் சிங் தில்லான், குல்தீப் சிங், குர்பிரீத் சிங் ஆகியோரை நீக்குவதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. நீக்கப்பட்ட 4 தலைவர்களும் கர்ஷங்கர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களாக உள்ளனர். இவர்களும் வெளியேறியுள்ளதால் பஞ்சாப்பில் காலியாகும் நிலைக்கு பாஜக கரைந்து வருகிறது.
திரிபுராவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம்
பாஜக ஆளும் திரிபுராவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக திரிபுராவின் குமார்காட் என்ற சிறிய நகரம் போதைப் பொருள் புழக்கத்தின் கூடாரமாக மாறி வருகிறது. அதாவது போதைப் பொருள் கடத்தலுக்கு முக்கிய வழித்தடமாக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் புகார் கூறினால் மட்டுமே போலீ சார் பெயரளவில் நடவடிக்கை எடுக்கின்ற னர். இல்லையென்றால் மாமூல் வாங்கிக் கொண்டு போதைப் பொருள் புழக்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். குமார்காட் பகுதி யில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப் பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கூறினாலும், ஒருவரின் விபரம் மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. திரிபுராவில் போதைப்பொருள் கடத்தல் மட்டுமின்றி மாடு கடத்தலும் மிகமோசமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்
வைகை எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட் டது முதல், ஸ்ரீரங்கம் மக்கள் வலியுறுத்தி வந்த நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள் ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 16ஆம் தேதி முதல் வைகை அதிவிரைவு ரயில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். அதுபோல, மலைக் கோட்டை விரைவு ரயில் கல்லக் குடி பழங்காநத்தம் ரயில் நிலை யத்தில் நின்று செல்லும். மன் னார்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், மயிலாடு துறை - மைசூரு விரைவு ரயில் புகழுர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.