states

img

கெஜ்ரிவால் கார் மீது பாஜக குண்டர்கள் கல்வீச்சு தில்லியில் பதற்றம்

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண் ணப்பட உள்ளது. புதுதில்லி தொகுதியில் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் முன் னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மகன் சந்தீப் தீக்சித்தும், பாஜக தரப்பில் முன்னாள் எம்.பி., பர்வேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர். சனிக்கிழமை அன்று புதுதில்லி தொகு தியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென கெஜ்ரிவாலின் கார்  மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் காரில்  ஏற்றி அனுப்பி வைக்க முயற்சித்த போது, ஒரு கல் காரின் மேற்கூரையில் வந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் அடி யாட்கள் தேர்தல் பரப்புரையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். பாஜக தொண் டர்களே, அரவிந்த் கெஜ்ரிவால் இது போன்ற தாக்குதல்களுக்கு அஞ்சுபவர் அல்ல. இதற்கு தில்லி மக்கள் உங்களு க்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே அரவிந்த் கெஜ்ரி வால் மீது தாக்குதல் நடந்த வீடியோவில், அவரின் கான்வாய் அருகிலேயே கருப்பு கொடியுடன் சிலர் வேண்டுமென்றே பரப்புரையை கெடுக்க முயற்சித்தது தெரிய வந்துள்ளது. கெஜ்ரிவால் கார்  மீது பாஜக குண்டர்கள் கல்வீச்சு நடத்திய சம்பவத்தால் தில்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.