states

இந்தியாவின் பழைய பெருமையை பிரதமர் மோடி மீட்டு வருகிறார்!

லக்னோ, ஜூன் 4- பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வின் பழைய பெருமையை மீட்டு வரு வதாக- அவரது நெருங்கிய நண்பரும் நாட்டின் இரண்டாவது பெரும்பணக் காரருமான கவுதம் அதானி பாராட்டித் தள்ளியுள்ளார். உத்தரப் பிரதேச முதலீட்டா ளர்கள் மாநாட்டில் அதானி கலந்து  கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் மேற்கண்டவாறு அதானி கூறி யுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதா வது: “புதிய இந்தியாவை உருவாக்க கடு மையாக பாடுபடும்” பிரதமர் நரேந்  திர மோடி மற்றும் முதல்வர் யோகி  ஆதித்யநாத் ஆகியோருக்கு முன்பாக  பேசுவதே பெருமைக்குரிய விஷயமா கும். தொழில்மயமாக்கல் மற்றும்  அனைவருக்கும் சீரான மேம்பாடு ஆகி யவற்றில் அதீத கவனம் செலுத்தும்  பொருளாதார மாதிரியை பிரதமர்  நரேந்திரமோடி நிறுவனமயமாக்கு வதைக் பார்க்கும் பாக்கியம் எனக்குக்  கிடைத்துள்ளது. ஒரு பிரதமராக, நாடு முழுவதும் குஜராத் மாதிரியை மோடி செயல்படுத்துகிறார். அதன் விளைவு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இப்போது உ.பி.யும் முன்னோக்கிச் செல்வதற்கான அடையாளமாக இருக்கிறது. ‘இன்றைய உ.பி.தான்  நாளைய இந்தியாவை தீர்மானிக்கும்’ என்ற அடிப்படையில், உ.பி.யின்  டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் அடித்தளத்தை முதல்வர் யோகி உருவாக்கி வருகிறார். பிரத மர் நரேந்திர மோடி இந்தியாவின் பெரு மையை மீட்டெடுக்கும் முயற்சி மேற் கொண்டு வருகிறார்.” இவ்வாறு அதானி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘அதானி குழுமம்’ 70 ஆயிரம் கோடி  ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் அந்த மாநிலத்தில் 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.