states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு அதிகாரிகள் நியமனம்

சென்னை, நவ. 25 - முதன்மைக் கல்வி அலுவலகங் களை ஆய்வு செய்வதற்கு, அதிகாரி களை நியமனம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி  அலுவலகங்களை 2024-25 ஆம் ஆண்டில் ஆய்வு செய்வதற்கு கல்வித் துறை முடிவு செய்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய  33 கல்வி மாவட்டங்களுக்கு- இயக்கு நர்கள், இணை இயக்குநர்களை ஆய்வு  அதிகாரிகளாக நியமனம் செய்து கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது. இவர்கள் தங்களின் ஆய்வுப் பணி களை டிசம்பர், ஜனவரி மாதங்களில் முடித்து ஆய்வு அறிக்கையை 15  நாட்களுக்குள் 2 நகல்களாக எடுத்து இயக்குநரின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என  கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னம் குறித்து ஒரு வாரத்தில் முடிவு : நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

சென்னை, நவ. 25 - அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்த மனு மீது ஒரு வாரத்தில் தமது நிலைபாட்டை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் அளித்துள்ளேன். இதுதொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது என, தேர்தல் ஆணையத்துக்கு அளித்த புகார் மனுவுக்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே, தமது மனு தொடர்பாக தேர்தல் ஆணையரின் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனுவின் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட மனு மீது ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

தமிழக மீனவர்கள் 23 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம், நவ. 25 - தமிழக மீனவர்கள் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிசம்பர் 3 வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 9 அன்று, இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கன், சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்களை, 3 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில், மீனவர்களின் காவல் திங்கள்கிழமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து 23 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் டிசம்பர் 3 வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.  தொடர்ந்து மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

ஐஜிஜி நோய் எதிர்ப்பு திறன் அளவு அதிகரிப்பால் டெங்கு பாதிப்பு குறைந்தது   பொதுசுகாதாரத்துறை தகவல்

சென்னை, நவ.25- உலகளவில் டெங்கு பாதிப்பு குறைந்ததற்கு ஐஜிஜி நோய் எதிர்ப்பு திறன் அளவு அதிகரிப்பே காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு பொது சுகாதார ஆய்வகம், நோய் எதிர்ப்பு சக்தியை கணக்கிடும் செரோ சர்வேயை நடத்தியது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 5,577 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஆய்வு முடிவுகளை தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று காலத்தில் உலக அளவில் டெங்கு பாதிப்பு குறைந்ததற்கு ஐஜிஜி நோய் எதிர்ப்பு திறனின் அளவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உலக அளவில் 2023 ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்புகள் 6 மில்லியன் அளவில் பதிவாகி இருப்பதாக கூறியுள்ளது. எனினும், எல் நினோ சுழற்சி, நகரமயமாக்கல், மக்கள்தொகை அடர்த்தி, சுத்தமற்ற சுற்றுப்புறத்தால் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றால்  நோய் பரவலும் இருப்பதாக சுகாதாரத்துறையின் ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

மருத்துவப் படிப்பில் 135 காலியிடங்கள்: ஆன்லைன் மூலம் சிறப்புக் கலந்தாய்வு

சென்னை, நவ. 25 - தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு ஆன்லைன் மூலம் நான்கு சுற்றுகளாக நடை பெற்று முடிந்தது.  இந்நிலையில், 6 எம்.பி.பி.எஸ் மற்றும் 28  பி.டி.எஸ் இடங்கள் நிரப்பப் படாமல் காலியாக இருந் தது. ஸ்டான்லி மருத்துவ மனையில் எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் உயி ரிழந்த நிலையில், கூடுத லாக ஒரிடம் சேர்க்கப்பட்டு, 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், 28 பி.டி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது. இதனிடையே, அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழ கத்தில் 50 இடங்கள் கூடுத லாக ஒதுக்கீடு செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.  இதனை அடுத்து, தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான காலியிடங் களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்தது. இந்த 135 காலி இடங்களை நிரப்பு வதற்கு சிறப்பு கலந்தாய்வு திங்களன்று (நவ. 25) பிற்பகல் 2 மணிக்கு  ஆன்லைனில் தொடங்கி யது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு

சென்னை, நவ. 25 - ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணன் பெயரில் மர்மக் கும்பல் ஒன்று போலி பேஸ்புக் முகநூல் கணக்கு தொடங்கி, அவரின் நண்ப ரிடமே கைவரிசை காட்ட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. “ராதாகிருஷ்ணன் ஜெக நாதன் எனும் பெயரில் முக நூலில் போலி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலி முகநூல் கணக்கில்  என்னுடைய புகைப் படத்தைப் பயன்படுத்தி, சி.ஆர்.பி.எப் நண்பர் ஒரு வருக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக தெரி வித்து, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, போலீ சில் புகார் தெரிவிக்க உள் ளேன். என்னிடம், ஒரே ஒரு முகநூல் கணக்கு மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கு மட்டுமே உள்ளது. மோசடி செய்ப வர்களிடம் இருந்து வரும் எந்த ஒரு அழைப்புகளையும் யாரும் ஏற்க வேண்டாம்” என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள் ளார்.

அபராதமாக பிடித்த 6 நாள் சம்பளத்தை  திரும்ப வழங்கக் கோரி போராட்டம்

கடலூர், நவ.25-  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் பங்கேற்றதற்காக 6 நாள் சம்பளத்தை அபராதமாக பிடித்தம் செய்ததை நீதிமன்ற உத்தரவுபடி திரும்ப வழங்கக் கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.எல்.சி நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற 39 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதை காரணம் காட்டி அபராதமாக 6 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிஐடியு இடைக்கால தடையாணை பெற்றது. அதைத் தொடர்ந்து, என்எல்சி நிர்வாகம் 22.12.2015 இல் உயர் நீதி மன்றத்தில் தடையாணையை நீக்கி கொண்டது. பிறகு, தடையாணை நீக்கத்திற்கு எதிராக சிஐடியு தொடுத்த மேல்முறை யீட்டு வழக்கில் 6 நாள் அபராத சம்பள  தொகையை தனி கணக்கில் வைக்க உத்திரவிட்டது. 9 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் 2004 செப்.18 அன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், என்எல்சி நிர்வாகம் பிடித்தம் செய்த நிர்வாக உத்தரவை ரத்து செய்து, 6 நாள் அபராத சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தர விட்டது. அதன் நகல் ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியாகியது. இதை யடுத்து, அந்த நகலை இணைத்து என்எல்சி தலைவரிடம் சிஐடியு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சருக்கு சிபிஎம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சார்பில் கடிதமும் தரப்பட்டது. இந்த 39 நாள் வேலை நிறுத்த போராட்டம் சிஐடியு மட்டும் நடத்தியது அல்ல. தொமுச, அதொஊச உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் இணைந்து நடத்திய போராட்டத்தில் 12 ஆயிரம்  தொழிலாளர்-ஊழியர்கள் பங்கேற்ற னர். இந்த போராட்டத்திற்கு பிறகு, 7  ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்று  விட்டனர். ஆனால் தற்போது பேச்சு வார்த்தையில் உள்ள தொமுச அதொஊச சங்கங்கள் இது பற்றி வாய் திறக்கவே இல்லை.  “No Work, No Pay” என்ற கோட்பாட்டிற்கு மேல் அபராத சம்பளம்  பிடித்தம் கூடாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்புகளுக்கு மாறாக 6 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று, தொகையை திரும்ப வழங்க என்எல்சி நிர்வாகம் முன்வர வேண்டும், மேல் முறையீட்டுக்கு செல்வதை கைவிட வேண்டும் என்று சிஐடியு சார்பில் நவ.21, 22 ஆகிய தேதிகளில் ஆலை மட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நவ.23 அன்று மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது தலைவர் டி.ஜெய ராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சீனிவாசன்,  மாவட்ட துணை தலைவர் ஏ.வேல்முருகன் நிர் வாகிகள் வி.குமார், எஸ்.முருகன், பி.புண்ணியமூர்த்தி எஸ்.வேலாயுதம், என்.வீராசாமி, ஜே.சாமுவேல், பி.பழனி வேல், என்.ரமேஷ் காண்ட்ராக்ட்-  சொசைட்டி சங்க பொருளாளர் வேல் முருகன், எம்.அன்பழகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.