states

அணு விஞ்ஞானி தற்கொலை

செங்கல்பட்டு,ஆக.30- மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சன்தவா (வயது 34). இவர் கல்பாக்கத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி  மையத்தில் விஞ்ஞானியாக இருந்தார். இவர் அணுபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த ஆண்டு பட்டப்படிப்பு படிக்க சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனால் அஞ்சன்தவா மட்டும் தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த  நிலையில் வீட்டில் உள்ள அறையில் விஞ்ஞானி அஞ்சன்தவா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.