திருநெல்வேலி, நவ. 21 - நாங்குநேரி தலித் மாணவனுக்கு உத வியதற்காக, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வானமாமலை (50) என்பவ ரது ஜெராக்ஸ் கடை மீது, நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதும், இச்சம்பவத்தில் பிளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டி ருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி பெருந்தெருவை சேர்ந்த கூலித்தொழி லாளி முனியாண்டி - அம்பிகாபதி தம்பதி யரின் மகனான பிளஸ் 2 படிக்கும் சின்ன துரை (17), அவரது தங்கை பத்தாவது படிக்கும் சந்திரா செல்வி (15) ஆகியோர், கடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு அரி வாளால் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலைவெறித் தாக்குத லுக்கு உள்ளாகினர். தன் கண்முன்னே இப்படியொரு பயங்கர சம்பவம் நடப்பதை பார்த்த அவர்களின் தாத்தா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், சின்னத்துரையோடு பிளஸ் 2 படிக்கும் சாதி ஆதிக்க மனோ பாவம் கொண்ட சக மாணவர்கள்தான் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. அவர்களில் 8 பேர், 11 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்தான், நாங்குநேரி நீதிமன்றம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் செவ்வாயன்று பிற்பகல் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கடை சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக, கடையின் உரிமை யாளர் மற்றும் அருகில் இருந்தவர் களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விசாரணையில், சக மாணவர்களால் வெட்டப்பட்ட தலித் மாணவன் சின்ன துரைக்கு, ஜெராக்ஸ் கடையின் உரிமை யாளரும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளருமான வானமாமலைதான் பல்வேறு சட்ட ரீதியான உதவிகளை செய்து வந்ததாகவும், அதனாலேயே அவ ரது கடை மீது குண்டு வீசியதாகவும் பிடி பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்த தாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.