states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இஸ்ரேல் - காசா போருக்கு இடையே, இந்திய வலதுசாரிகளின் சமூக ஊடக கணக்குகள் மூலமாக  பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஏராளமான பொய்ச் செய்திகளும், போலிச் செய்திகளும் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்த போரில் இவர்கள் மூலம் முதலில் பலியாக்கப்படுவது உண்மை விபரங்கள்தான். ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலுக்குள் புகுந்து குழந்தைகள் உட்பட கொடூரமாக தலையை வெட்டி படுகொலை செய்துவிட்டது என்பது உள்பட உலகிலேயே அதிகமான பொய்ச் செய்திகளை பாலஸ்தீனர்களுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த வலதுசாரிகள்தான் பரப்பியிருக்கிறார்கள் என்பதை உண்மை கண்டறியும் பல நிறுவனங்கள் ஆராய்ந்து தெரிவித்துவிட்டன. இஸ்லாமிய வெறுப்பின் உச்சம் இந்திய வலதுசாரிகளை இப்படி ஆட்டுவிக்கிறது. உலக அளவிலும் இவர்கள் முற்றாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.