அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையம் (ஏஐசி) உள்ளது. இந்த மையத் திற்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் 19 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை உருவாக்கப் பட்டுள்ளது. “சமத்துவத்தின் சிலை (Statue of Equality)” என்று பெயரிடப்பட் டுள்ள இந்த அம்பேத்கர் சிலை இந்தியாவிற்கு வெளியே மிக உயரமான சிலை என்ற சிறப்பைப் பெற உள்ளது. அம்பேத்கர் சிலை வரும் அக் டோபர் 14 அன்று பிரம் மாண்ட விழாவுடன் திறக்கப்பட உள்ளது. திறப்பு விழா நிகழ்வில் அமெரிக்கா மற்றும் உலகின் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த பிர முகர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்க வும் அம்பேத்கர் நினைவுச்சின்னம் உதவும் என ஏஐசி தெரிவித்துள் ளது. குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ் பெற்ற சிற்பி ராம் சுடாரே, அம்பேத்கர் சிலையையும் உரு வாக்கியுள்ளார்.