சென்னை,ஜூலை 19- கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு வரு வாய்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகா ரத்தில், மாணவி பயின்ற தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளி யின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளியின் அலுவலகத்தி லிருந்த மாணவர்களின் சான்றிதழ் கள் உள்ளிட்ட பலவும் தீக்கிரை யாக்கப்பட்டன. இதனால், அங்கு படித்து வந்த மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி செவ்வாயன்று (ஜூலை 19) செய்தியாளர்களை சந்தித் தார்.
அப்போது, “முதலமைச்சர் அறிவுறுத்தல்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பள்ளியை ஆய்வு செய்தோம். நீதி மன்ற வழக்கு காரணமாக பெற்றோரை நேரில் சந்திக்க முடியவில்லை” என்றார். மறைந்த மாணவியின் தாய் எம்.காம் படித்துள்ளார். அவர் கேட்டுள் ளபடி, அவருக்கு பணி வழங்குவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறினார். பள்ளியில் சான்றிதழ் எரிந்துள்ளன எனவும், அருகில் உள்ள தனியார் பள்ளிகள் சக்தி பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறி உள்ளனர். நாற்காலி உட்பட அனைத்தும் தூக்கி செல்லப்பட்டன. முதலமைச்சருடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், நாங்கள் பள்ளியில் நடந்தது என்ன? தீர்வு என்ன? மாண வர்களின் பெற்றோரின் மனநிலை என்ன? என்பது குறித்து கூற உள்ளோம். அதனை தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.