திரைப்பட நடிகை ஹனி ரோஸ் அளித்த பாலியல் புகாரின் பேரில் பிரபல தங்கநகை வியாபாரியும் தொழில் அதிபருமான பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகையின் புகாரின்படி, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் எர்ணாகுளம் மத்திய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை கூறுவது, இதுபோன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடை திறப்பு விழாவில் பாபி செம்ம னூர் ஹனி ரோசைஆபாசமாக பேசிய தாகவும், பிறகு மற்றொரு கடை திறப்பு விழாவுக்கான அழைப்பை நிராகரித்த தாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதையொட்டி அவரிடமிருந்து மோச மான கருத்துகள் தொடர்ந்து வந்தன. பாபியின் தொடர்ச்சியான ஆபாச அவ தூறுகளுக்கு எதிராக புகார் அளித்த தாக ஹனி ரோஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். “பாபியின் மனநிலையில் உள்ள கூட்டாளிகள் மீதும் புகார்கள் தெரி விக்கப்பட்டுள்ளது. பாபி பணத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்… இந்தியா வில் உள்ள சட்ட அமைப்பின் சக்தியை நான் நம்புகிறேன்’’ -என ஹனி ரோஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ஏற்கனவே அவ தூறு செய்ததாக முன்பு அளித்த புகாரும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஷாஜி (60) என்பவர் ஜன.6 திங்களன்று கும்பளம் வடக்கு சதீசபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஹனியின் முகநூல் பதிவில் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாபி கைது செய்யப்பட்ட பிறகு, பலர் தங்கள் கருத்துகளை நீக்கியுள்ளனர். சிலரது கணக்கே நீக்கப்பட்டது. பேஸ்புக் நிறுவனம் கூடுதல் தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளது.