சென்னை, ஜூலை 26 - நடப்பு நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட கிராமப்புற ஏழைகளின் நலன்களை யும் - தமிழ்நாட்டையும் முழுமையாக புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் எழுச்சியாக நடை பெற்றன. இந்த போராட்டங்களில் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்; திட்டத்திற்கான வேலை நாட்களை 200 நாட்களாகவும் தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்திட வேண்டும்; பொது விநியோ கத் திட்டத்தை அனைத்து ஏழை - எளிய குடும்பத்தினருக்கும் விரிவுபடுத்த வேண்டும்; 60 வயதைக் கடந்தவர் களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்; வீடற்ற குடும்பங் களுக்கு ஒன்றிய அரசின் பங்காக தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வீடு கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி, வெள்ளிக்கிழமை யன்று நாடு முழுவதும் ஆயிரக்கணக் கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் லட்சக்கணக் கான மக்கள் திரண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். அதனொரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர், புதுக்கோட்டையில் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், திருச்சியில் மாநிலப் பொருளாளர் அ. பழனிச்சாமி, தஞ்சாவூரில் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.