கர்நாடகாவில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் 98 பேருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் மருகும்பி கிராமத்தில் 2014 ஆகஸ்ட் 28, அன்று மாலை திரைப்பட நுழைவுச் சீட்டு தொடர்பாக சாதி வெறியர் கள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து அன்றைய தினம் இரவு குடியிருப்புப் பகுதியில் புகுந்து அவர்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த னர். மேலும் அவர்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இந்த தாக்குதலில் பல வீடுகள் எரிந்து நாசமாகின. காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
சிபிஎம் தலைமையில் போராட்டம்
இந்த தாக்குதலை கண்டித் தும், தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நீதி கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலித் அமைப்புகள் கங்காவதி காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிபிஎம் ஊழியர்கள், தலித் அமைப்புகள், பாதிக்கப் பட்ட மருகும்பி கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து பெங்களூரு நகரில் பிரம்மாண்ட பேரணியும் நடத்தினர். இந்த போராட்டத்திற்குப் பிறகு தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய 117 பேரை அடையாளம் கண்டு அவர்கள் மீது கங்காவதி போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு மருகும்பி தலித்து கள் மீதான வன்முறை வழக்கு கொப்பல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மருகும்பி தலித் மக்க ளின் நீதிக்கான போராட்டத்திலும் தீவிரமாக இறங்கியது. இதனி டையே வழக்கின் முக்கிய சாட்சி யான மருகும்பி கிராமத்தின் தலை வர் வீரேஷ் ஜூலை 2015இல் நீதி மன்றத்தில் சாட்சியமளிக்க வரு வதற்கு முன்பு கொப்பல் ரயில் நிலையம் அருகே மர்மமான முறை யில் உயிரிழந்தார். இதனால் மருகும்பி தலித் மக்கள் மீதான வன்முறை விவகாரம் நாட்டின் முக்கிய வழக்காக மாறியது.
98 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்நிலையில், 10 ஆண்டுகால விசாரணையின் முடிவில் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் திங்களன்று (அக்., 21), “மரு கும்பி தலித் மக்கள் மீதான வன்மு றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 117 பேரில் 101 பேர் குற்றவாளி கள்” என அறிவித்தது. ஏனெனில் 16 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்துவிட்டனர். தொடர்ந்து வியாழக்கிழமை (அக்., 24) கொப்பல் மாவட்ட சிறப்பு நீதிபதி சந்திரசேகர் 171 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அவர் வழங்கிய தீர்ப்பில், “மருகும்பி தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களாக குற்றம்சாட்டப் பட்டவர்கள் ஆண்கள் மீது மட்டு மின்றி, பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மரக்கட்டைகள், கற்கள் மற்றும் செங்கல் கற்களால் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளது குற்றப்பத்திரிகையில் நிரூ பணமாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பெண்கள் நாகரீ கத்தை மீறியுள்ளனர். ஆதலால் இதுபோன்ற வழக்கில் கருணை காட்டுவது நீதியை கேலி செய்யும் செயலாகும். இந்நிலையில், குற்றம்சாட்டப் பட்ட 117 பேரில் 16 பேர் விசாரணை யின் போதே இறந்துவிட்டனர். இதனால் மீதமுள்ள 101 பேர் குற்றவாளிகள் ஆவர். பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன் கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் 98 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு வருக்கும் தலா ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள மூவரும் பட்டி யல் சாதிகள் மற்றும் பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர்கள். அவர் களுக்கு சட்டம் பொருந்தாது என்ப தால், மூவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படு கிறது” என நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பில் கூறினார்.
சிபிஎம் தலைவர்களுக்கு பாராட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, டிஎஸ்எம்எம் (தலித் சோசன் முக்தி மன்ஞ்) அகில இந்திய தலைவ ரும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பின ருமான ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி., மற்றும் சிபிஎம் தலைவர்கள், ஊழியர்கள் மருகும்பி தலித் குடும்பங்களுக்காக வழக்குப் பதிவு முதல் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கடுமையாக போராடி மரு கும்பி தலித் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்துள்ளனர். சிபிஎம் தலைவர்களுக்கு மருகும்பி தலித் மக்கள் பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துள்ளனர்.