states

7.5 விழுக்காடு ஒதுக்கீடு மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது: இயக்குநரகம்

சென்னை,ஆக.5- மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது  என மருத்துவ கல்வி இயக் குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர  7.5 விழுக்காடு உள் ஒதுக் கீடு வழங்கப்பட்டு வரு கிறது. அதன்படி இந்த ஆண்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இந்த நிலையில், மருத்து வப் படிப்பில் 7.5 விழுக்காடு  ஒதுக்கீட்டில் சேரும் மாண வர்களிடம் கட்டணம் வசூ லிக்கக் கூடாது என மருத்து வக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு  மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மருத்துவ கல்லூ ரிகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களிடம், கல்விக் கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்விதக் கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது. இந்த ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவிகள், ‘புதுமை பெண் திட்டம்’ நிதியுதவி உட்பட அனைத்து வித கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி உடையவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சில இடர்பாடுகள் இருந்தால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.