states

தீக்கதிர் விரைவு செய்திகள்

60 உயிர்களை பலிகொண்ட முசாபர் நகர் கலவரம் தொடர்பான வழக் கில் பாஜக அமைச்சர் மற்றும் பிற தலைவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப் பிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பான விசாரணையில் ஆஜராகாததால் அவர்க ளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை கன்சால் நீதிமன்றம் அக்.22 செவ்வாயன்று பிறப்பித்தது. உத்தரப்பிரதேச அமைச்சர் கபில் தேவ் அகர்வால், தாஸ்னா கோவில் பூசாரி யதி நரசிம்மானந்த், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராணா, முன்னாள் எம்பி பதேந்து சிங், முன்னாள் எம்எல்ஏ அசோக் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு எதி ராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித் துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனை வரையும் புதனன்று ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் சஞ்சீவ் பல்யான், விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் சாத்வி பிராச்சி, பாஜக முன்னாள் எம்எல்ஏ உமேஷ் மாலிக், பாஜக முன்னாள் எம்பி சோகன்வீர் சிங், முசாபர்நகர் மக்களவை எம்பி ஹரேந்திர சிங் மாலிக் ஆகியோர் திங்களன்று நீதி மன்றத்தில் ஆஜராகினர். ஆகஸ்ட் 2013 இறுதியில் முசாபர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கலவரத்திற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. கலவரத்தில் அறுபதுக்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர்.