மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்ட 393 ஆண்டு சந்தா, 116 ஆறு மாத சந்தா என 509 சந்தாக்களுக்கான 9 லட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபாய்க்கான காசோலை தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வழங்கினார். இந்நிகழ்வில் தீக்கதிர் சி.கல்யாணசுந்தரம், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், வே.ஆறுமுகம், வி.தனலட்சுமி, இ.சர்வேசன், எஸ்.சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.