states

காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

நாமக்கல், நவ.10- பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில்  மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த னர்.  நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளை யம் அருகே உள்ள நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவ ரின் மகன் வினித் விமல்ராஜ் (21).  இவர் குமாரபாளையத்தில் உள்ள  ஒரு தனியார் கல்லூரியில் இறுதி யாண்டு பொறியியல் பயின்று வந்தார். அதே கல்லூரியில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் நந்தகுமார் (21) மற்றும் ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியைச் ஷேக் பைசுல் ரகுமான் (21) ஆகியோர் பயின்று வந்தனர். நண்பர்களான 3 பேரும் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று வினித் விமல்ராஜ் வீட்டுக்கு வந்துள்ளனர். இதன்பின் வினித் விமல்ராஜ் தனது பெற்றோரிடம் நானும், தனது நண்பர்களும் நகப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றவர்கள் நீண்ட நேர மாகியும் வராததால் வினித் விமல்ராஜ் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் 3 பேரின் காலணிகள், ஆடைகள் மற்றும் செல்போன்கள் ஆற்றின் கரையில் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஜேடர் பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறை யினர் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ள னர். தீயணைப்பு துறையினர் காவல் துறை உதவியுடன் காவிரி ஆற்றில் மூன்று கல்லூரி மாணவர்களையும் இரவு முழுவதும் தேடிவந்தனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஞாயிறன்று காலை நாமக்கல் தீய ணைப்புத் துறையினர் மூலம் காவிரி ஆற்றில் காணாமல் போன மாண வர்களை தேடினர். அப்போது சிறிது தூரத்தில் உள்ள ஒரு பாறை இடுக்கில் வினித் விமல் ராஜ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதையடுத்து மற்ற இரண்டு மாணவர்களின் உடல்களையும் மீட்டு ஜேடர்பாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.