states

பழங்குடியினர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி

சென்னை, மே 31- பழங்குடியினருக்கான அடிப் படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை, திருப் பத்தூர்,  கள்ளக்குறிச்சி, திருச்சி,  திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோவை, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும்  பழங்குடியின மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள், சாலை  வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல், பள்ளிகள் பராமரிப்பு, மேம்படுத்துதல் போன்ற உட்கட்ட மைப்பு பணிகள் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் படும் என சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை செயல்படுத்தும் வகை யில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி, அத்திப் பாடி கிராமப்பகுதியில் சாலைக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு ரூ.360 லட்சமும், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், நாயக்கனேரி மலை பழங்குடியினர் பகுதியில் தடுப்பணை கட்ட ரூ.4.95 லட்சம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு சாலை பணிக்கு ரூ.557.25 லட்சம், திருச்சி மாவட்டம், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.48.40 லட்சம். நாமக்கல், திருவண்ணாமலை, கோவை நீலகிரி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பழங்குடியி னர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிக்கு கட்டிட பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.268.30 லட்சம் என மொத்தம் 17 கோடியே 18 லட்சத்து மூன்றாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.