states

ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம்,ஏப்.3- அரக்கோணம் அருகே ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  ஆந்திர மாநிலம் கச்சிகுடாவில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் ரயில் அரக்கோணத்திற்கு வந்தது. இதில் ரயில்வே போலீசார் நடத்திய  சோதனையில்  கடைசி பெட்டியில் கேட்பாரற்று பைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறி முதல் செய்து யார் கடத்தியது என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.