புதுதில்லி, ஆக. 13 - பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ‘கட்டப்பட்டுள்ள’ எய்ம்ஸ் மருத்துவமனைகளைப் பற்றிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள் ளார். எய்ம்ஸ் பற்றிய பல விவ ரங்களைத் தொடர்ந்து அளித்து வரு கிறார். அதில் பல தகவல்கள் தவறான வை என்று, ‘டைனிக் பாஸ்டர்’ ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. “மோடியின் ஊழல்களும்-வெற்றுப் பேச்சுக்களும் நாட்டின் ஆரோக்கி யத்தை சிதைத்து விட்டது. மோடி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் கூறும் பொய்கள் மட்டுமே நினை வில் உள்ளன. பல எய்ம்ஸ் மருத்து வமனைகளைக் கட்டியிருப்பதாகக் கூறினாலும் அங்கு மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதே உண்மை. கொரோனா தொற்றுநோய் காலத்தில் மோடி அரசு சுகாதார அமைப்பையே நோய்வாய்ப்படுத்தி விட்டது. நாட்டிலுள்ள 19 எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் தற்போது 40 சதவீத மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இது தவிர, 55 சதவீதம் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில 347 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மொத்தம் அனுமதிக்கப் பட்ட 1,207 பணியிடங்களில் சுமார் 29 சதவீதம். அதே நேரத்தில், 2,431 பணி யாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன, இது மொத்த பணியிடங் களில் 19 சதவீதம்.
மோசமான நிலையில் மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் மிக மோசமான நிலையில் உள்ளது. மதுரையைப் தற் சமயம் இராமநாதபுரத்தில் ‘செயல் படும்’ மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையில், 111 மருத்துவர் பணியிடங் களும் 634 பணியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நாடு முழுவதும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 5,527 மருத்துவர் பணியிடங்களில் 2,161 பணியிடங்களும், மொத்தமுள்ள 46,233 பணியாளர் இடங்களில் 20,269 பணியிடங்களும் காலியாக உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை காலிப் பணியிடங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமது ட்விட்டர் பதிவில், “ நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர், உங் களது வஞ்சகத்தை உணர்ந்து விட்டார்கள், உங்கள் அரசாங்ம் விடைபெறும் நேரம் வந்துவிட்டது”. எனக் குறிப்பிட்டுள்ளார்.