states

img

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கொடூரம் 4 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பலாத்காரம்

பாஜக ஆளும் சத்தீஸ்கரின் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத் பூர் மாவட்டத்தில் உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆவது வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர் என 4 பேர் கும்பல் பாலியல் பலாத்கா ரம் செய்த கொடூரச் சம்பவம் நிகழ்ந் துள்ளது. 

சிறுமி பயிலும் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவீந்திர சிங் குஷ்வாஹா, மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்களான அசோக் குமார் குஷ்வாஹா மற்றும் குஷால் சிங் பரிகார், வனத்துறை ஊழியர் பன்வாரி சிங் ஆகிய 4 பேரும் நவம்பர் 15ஆம் தேதி சிறுமியை ரவீந்திர சிங் குஷ்வா ஹாவின் வீட்டிற்கு வரவழைத்து கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என 4 பேரும் மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி கடைக்குச் சென்ற சிறுமியை ஆசிரியர் தடுத்து நிறுத்தி வனத்துறை ஊழியர் பன்வாரி சிங்கின் வீட்டில் மீண்டும் 4 பேரும் சேர்ந்து கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியை கும்பல் பலாத் காரம் செய்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய் யப்பட்ட ஆசிரியர்கள் இடைநீக்கம் செய் யப்பட்டதாக மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்ட கல்வித்துறை அறி வித்துள்ளது.