states

img

வயநாட்டில் வாலிபர் சங்கத்தின் இளைஞர் படை: பேரிடர் பகுதிகளில் மக்களின் காவலர்கள்!

வயநாடு மாவட்டம் சூரல்மலை–- முண்டக்கை பேரிடர் பகுதியிலும், உடல்கள் வீசப்பட்ட சாலியாறிலும் மீட்புப் படையினருடன் இணைந்து போராடிய கேரளத்திற்கு சொந்தமான ராணுவம் ஒன்று உள்ளது. அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர் படை. நிலச்சரிவு நடந்த ஒரு மணி நேரத்தில் ஓடிய நீலச் சட்டைகள் (சீருடை) பேரழிவு பகுதியில் இன்னும் உள்ளன. அவர்களின் கைகள் மண்ணில் இருந்து பல உயிர்களை மீட்டன, பாறைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இறந்த உடல்கள், கொந்தளிப்பான நீரோட்டத்தில் சிதறிய உடல் உறுப்புகளை அவர்கள் மீட்டனர். பேரிடர் பகுதியின் தேடலில், முகாம்களில், மருத்துவமனைகளில், தெருக்களில் எங்கும் ஓர் இளமை ஒளி வீசுகிறது.

ஒரு மணி நேரத்திலேயே...

அதிகாலை 3.30 மணியளவில் இரண்டா வது நிலச்சரிவு நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சம்பவ இடத்திற்கு விரைந்தவர்களில் வாலிபர் சங்க இளை ஞர் படையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். புத்து மலை பேரிடர் அனுபவம் உள்ளதால் மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் அவர்கள் வந்தனர். நிலச்சரிவு பகுதிகளில் வசித்தவர்களை செல்பேசிகளில் அழைத்து தகவல்களை தெரிந்து கொண்டனர்.

பேரழிவில் சிக்கிய பலரை பத்திரமாக மீட்பது முதல் பணியாக இருந்தது. பேரிடர் பகுதியில் சிக்கித் தவித்த பல குடும்பங்கள் துணிச்சலாக மீட்கப் பட்டன. இரண்டு படுக்கை நோயாளிகள் துணியால் செய்யப்பட்ட ஸ்ட்ரெச்சரில் சாலைக்கு அழைத்து வரப்பட்டனர். மற்ற இடங்களில் சிக்கித் தவித்த 20 பேர் விடிவதற்குள் மீட்கப்பட்டனர். அமைப்பு நட வடிக்கைகளில் தீவிரமாக இருந்த பலருக்கு இப்பகுதி நன்கு தெரிந்திருந்தது. இது மீட்புப் பணிக ளுக்கு உதவியதாக நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய கே.ரபீக், கே.எம்.பிரான்சிஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

துப்புரவுப் பணியில்...

நான்காம் நாள், முண் டக்கையில் பாலத் துக்குள் இருந்த உயிர்த் துடிப்பு ராடாரில் தெரிந்ததும், ராணுவ வீரர்கள் தயங்கி நிற்க இளைஞர் படை யினர் இறங்கி சோதனை செய்த னர். வனராணி மலை உச்சியில் உள்ள பண்ணையில், தனிமைப் படுத்தப்பட்ட கால்நடைகளுக்கு பச்சைப் புல் கொண்டு வந்த னர். வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட் டங்களில் இருந்து இளைஞர் படை வந்திருந்தது. சூரல்மலை முதல் முண்டக்கை வரை துப்புரவுப் பணிகளில் 508 உறுப்பினர்கள் குவிக்கப்பட்டனர். வயநாட்டில் வாலிபர் சங்கம் கட்டும் 25 வீடுகளுக்கு நிதி திரட்ட கேரளம் முழுவதும் இளைஞர்கள் பல்வேறு சவாலான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலம் கட்ட  பாக்கு மரம்...

கயிறைத் தவிர, தற்காலிகப் பாலம் என்ற எண்ணம் வந்தபோது, ராணுவத்துக்கு நீளமான கமுகு (பாக்கு) மரங்களை வெட்டிக் கொண்டு வந்ததும் இளைஞர் படைதான். வனராணி எஸ்டேட்டில் சிக்கியுள்ள 17 பேரை மீட்கும் பணியில் என்டிஆர்எப் உடன் இணைந்து கடின உழைப்பு. அடுத்தடுத்த நாட்களில், 250 ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் நியமிக்கப்பட்ட ஆறு இடங்களில் அணிதிரண்டனர். மாநில தலைவர் வி.வசீப், செயலாளர் வி.கே.சனோஜ் உள்ளிட்டோர் பேரிடர் பகுதியில் துணிச்சலாகத் தலைமை வகித்தனர்.

ஆர்எஸ்எஸ் ஆதரவு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரின் பிக் சல்யூட்

பல்வேறு அமைப்பினர் மீட்பு, நிவாரணப் பணி களில் உள்ள போதி லும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினரின் தன்னலமற்ற பணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மலை யாளச் செய்தி தொலைக்காட்சி யான ரிப்போர்ட்டர் டிவியில் துணிந்து ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைபாட்டை எப்போதும் வெளிப் படுத்தும் செய்தி ஆசிரியர்களில் ஒருவர் எஸ்.சுஜயா பார்வதி. 

அவரே கூறுகிறார்: 8 ஆவது நாளாக வாலிபர் சங்க மீட்பு படை யினர் வயநாட்டில் 500 பேர் உள்ள னர். மலை மீதுள்ள புஞ்சிரி மட்டம் முதல் கீழ் பகுதியான சூரல்மலை வரை உள்ள பகு திகளில் வாலிபர் சங்க மீட்புப் படையினரை பார்க்க முடிந்தது. மாநிலத் தலைவர் வசீப், செய லாளர் சனோஜ் ஆகியோர் முதல் நாளிலிருந்தே அங்கு உள்ளனர். 

18 ஆயிரம் தன்னாவ்லர்கள்

சேவாபாரதி, இளைஞர் காங்கி ரஸ்காரர்களுக்கு காயம் ஏற் பட்டால் அரசியல் வேறுபாடுக ளைக் கடந்து அங்கு மருந்துடன் செல்வது வாலிபர் சங்கத்துக் காரர். நான் வாலிபர் சங்கச் செயல்பாடுகளை பொதுவாக எடுத்துக் கூறுவதில்லை. அதற்கு தெளிவான அரசியல் காரணம் உண்டு. ஆனால் ஒரு துயரம் ஏற்பட்டபோது அவர்கள் என் னென்ன செய்தார்கள் என்பதை கூறாமல் இருக்க முடியாது. அவர் களுக்கு தகுதியான மதிப்பை நாம் அளித்தாக வேண்டும். 

காஞ்ஞங்காடு நகரத்தில் கண்ட காட்சி, தேநீர் குடிக்கலாம், பலகாரம் ருசிக்கலாம் பைசா வய நாட்டுக்கு, என நிதி திரட்டல் நடந்து கொண்டிருக்கிறது. லாரிலாரியாக நிவாரணப் பொருட்கள், புத்தம்  புதிய ஆடைகளுடன் சென்று கொண்டிருக்கின்றன.

மாநிலத்தின் தனித்தன்மை!

காட்டில் ஒற்றைய டிப் பாதையில் நடை. இரண்டு பேர் முன்னால் ஆயுதங்களுடன் வழி நடத்துகிறார்கள். இரண்டு பேர் இறந்த உடலை ஒரு துணி யில் சுற்றி கம்பில் கட்டி தூக்கிச் செல்கின்றனர். பின்னால் மூன்று பேர். வாலிபர் சங்க இளைஞர் படையின் தொண்டர்கள் சாகச மாக இறந்த உடல்களை வெளி யுலகிற்கு கொண்டு செல்கின்ற னர். 150 பேர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். வனப்பகு தியில் இருந்து ஒரு சடலம் மற்றும் 13 பேரின் உடல் உறுப்பு கள் வெளியே கொண்டு வரப் பட்டன. கும்பலப்பாறை நகருக்கு மேலே உள்ள வனப்பகுதியில் ஒன்பது கிலோமீட்டர் தூரம் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இரண்டாம் நாள் காலை ஐந்து மணியளவில் போத்துகா லில் திரண்டனர். ஆறு மணிக்கு முண்டேரி எஸ்டேட்டை அடைந்த னர். முதல் குழு வாலிபர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.ஷபீர் தலைமையில் ஆறு மணிக்கு வனப்பகுதிக்கு சென்றது. இரண்டாவது குழு ஆறரை மணிக் கும், மூன்றாவது குழு ஏழு மணிக்கும் கிளம்பியது.

மரத்தில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் உட்பட இறந்த உடல்கள் மற்றும் உடல் உறுப்புகள் வாணியம்புழா வுக்கு கொண்டு வரப்பட்டன. அங் கிருந்து ரப்பர் படகில் சாலியாறு க்கு கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து வாலிபர் சங்க தலை வர் பி.ஷபீர் கூறுகையில், ‘கைகள், கால்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட தலைகள் எங்கும் இதயத்தை உலுக்கும் காட்சிகளாக இருந் தன. கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் ஆற்றில் பல இடங்களில் குவிந் தும் சிதறியும் கிடக்கின்றன என்று கூறினார். நிலம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையிலும் தன்னார்வப் பணிக்காக அப்பகுதி யைச் சேர்ந்த சுமார் 50 ஊழியர் கள் இருந்தனர்.

“இதுதான் மாநிலத்தின் தனித் தன்மை” என்கிறார் கே.எம். பிரான் சிஸ் (35), மாநில இளைஞர் நல வாரியத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் இவர். இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இவர், வயநாட்டில் உள்ள கல்பற்றாவில் உள்ள தனது வீட்டில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்ட சில மணி நேரங்களில் சூரல் மலைக்கு வந்த முதல் சிலரில்  ஒருவர். பிரான்சிஸும் உள்ளூர் மக்களும், தீயணைப்புப் படை வீரர்களுடன் சேர்ந்து, அன்று விடிவதற்குள் பல உயிர்க ளைக் காப்பாற்றினர். ஜூலை 30 செவ்வாயன்று அதிகாலையில் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான இளைஞர்க ளில் பலரும் பேரிடர் பாதித்த பகு திகளில் மீட்பு மற்றும் நிவார ணப் பணிகளில் உள்ளதாகக் கூறுகிறார் பிரான்சிஸ்.

தொகுப்பு : சி.முருகேசன்