states

img

‘மனிதனாகணும்’ என்று பாடல் எழுதிய முருகன் கட்டகடா-வுக்கு கொலை மிரட்டல்....

கொச்சி:
கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும் பாடலாசிரியருமான முருகன் கட்டகடாவுக்குகொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

‘மனிதனாகணும்’ என்று பாடல் எழுதியதற்காக அவரைக் கொலை செய்ய ஒரு கும்பலை அனுப்பியிருப்பதாக பெயர்குறிப்பிடாத மர்மநபர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து முருகன் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.‘ஜே நல்ல மனுஷானாகான் நோக்கு’என்கிற நாடகத்தின் ஆசிரியர் ஈ.கே. அயமுவின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘சோப்ப’ திரைப்படத்திற்காக ‘மனுஷ்யனாகணும்’ பாடல் எழுதப்பட்டது. மனுஷ்யனாகணம், மனுஷ்யனாகணம், உயர்ச்ச தாழ்ச்சகள்க்கு அதீதமாய ஸ்னேகமே, நினக்கு ஞங்ஙள் பேரிடுந்நு, அதாண் மார்க்சிஸம்.... (மனிதனாக இரு, மனிதனாக இரு, உயர்வு தாழ்வுகளற்ற எல்லை கடந்த அன்பே, உனக்கு நாங்கள் பெயரிடுகிறோம்.. அதுதான் மார்க்சியம்..!), என்கிற வரிகள் இடம்பெறும் அந்தப்பாடல் கேரள சட்டப்பேரவைத் தேர்தலின் போது வைரலாகியது. இதற்காகவே, மக்கள் ஒற்றுமையை விரும்பாத சக்திகள் கவிஞர் முருகன் கட்டகடாவுக்கு தற்போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

;