கேரள ஆளுநர் அரசியல் சாச னத்துக்கு எதிரானவர் என்றும் ஆளுநர் மாளிகை ஆர்எஸ் எஸ்ஸின் மையமாக மாறிவிட்டது என்றும் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் ஏ.கே- பாலன் விமர்சித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் சவால் விடுகிறார். ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன் பிறகும் சவால் தொடர்கிறது. இந்தியாவில் எந்த ஆளு நரும் செய்யாததை ஆரிப் முகமது கான் செய்து வருகிறார். சர்.சி.பி.யை கேர ளம் நாடு கடத்தியது என்பதை ஆளுநர் தெரிந்து கொள்வது நல்லது. அரச மைப்பு சாசனத்தை பாதுகாக்க இடது சாரிகள் எந்த எல்லைக்கும் செல்வார் கள்” என ஏ.கே.பாலன் செய்தியாளர்க ளிடம் கூறினார்.