வயநாடு நிவாரண நிதிக்கு, கோயம்புத்தூர் மலையாளி சமாஜம் மற்றும் சிஎம்எஸ் கல்வி அறக்கட்டளை இணைந்து ரூ. 25 லட்சத்தை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினர். இதேபோன்று, கோவையில் இயங்கி வரும் கேரள கிளப் சார்பில் ரூ.1 லட்சமும், ஐயப்ப கீ ஸ்டோர் கிரிஷன் சார்பில் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ 26.50 லட்சம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, மலையாளி சமாஜம் தலைவர் கே.கே.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் கே.ராஜகோபால், துணைத் தலைவர் கே.விஜயகுமார், கமிட்டி உறுப்பினர்கள் டி.ஆர்.அசோக், சந்தோஷ் நாயர், மலையாளி அமைப்பின் நிர்வாகி சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.