states

img

வங்கிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வங்கியாளர் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

திருவனந்தபுரம் முண்டக்கை நிலச்சரிவால் பாதிக் கப்பட்ட மக்களின் வங்கி கடன்கள் அனைத்தும் தள்ளு படி செய்யப்பட வேண்டும்  என கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநில அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் வலியுறுத்தினார். திருவனந்தபுரத்தில் நடந்த வங்கி யாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசிய தாவது: நிலச்சரிவில் ஒரு பிரதேசம் முழுவதும் பெரும்பாலும் அழிந்து விட்டது. அங்கு வாழ்ந்துகொண்டி ருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த போது பெரும் துயரத்தை சந்தித்தனர். சில குடும்பங்கள் முற்றிலும் மர ணத்தை சந்தித்துள்ளன. இந்த குடும் பங்கள் அனைத்தும் விவசாய குடும் பங்கள் என்பதால் பல்வேறு கடன்களை வங்கிகளிடமிருந்து பெற்றிருப்பார் கள். புதிய வீடு கட்டுவதற்காக, வாகனம் வாங்க கடன் பெற்றிருக்கலாம். இப் போது அந்த வீடும் வாகனமும் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. உயிர் இழப்பைவிட இவை ஒன்றும் பெரி தல்ல. மாடுகள் வாங்க கடன் பெற்றி ருக்கலாம். பெரிய அளவில் கால்நடை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயம் செய்வதற்காக கடன் பெற்றவர்கள் உண்டு அதில் பலரும் உயிருடன் இல்லை. இருந்தாலும் அந்த நிலத்தில் மறுபடி அதே முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இது போன்ற ஏராளமான கடன்களுடன் தொ டர்புள்ள பிரச்சனைகள் அங்கு உள்ளன. அவர்களுக்கு சிறந்த முறையிலான புனரமைப்பு ஏற்பாடுகளை செய்ய  வேண்டும். இதில் அனைவரிடமி ருந்தும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. நாடும், உலகமும் இதில் கேரளத்துக்கு ஆதரவாக உள்ளன. மாநில வங்கிகள் குழுவும் (எஸ்எல்பிசி) இத்தகைய ஆதரவை தெரிவித்துள் ளது. அழிவு பெரியதாக இருந்தாலும், அழிவு ஏற்பட்ட பகுதி மிகச்சிறியதாகும். அந்த பகுதியில் உள்ள கடன்கள் தொ டர்பான பிரச்சனை குறித்துதான் நாம் விவாதிக்கிறோம். கடன் பெற்றவர்க ளால் அதை திருப்பி செலுத்த முடி யாத அவலம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு முன்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் கொடுத்துள்ள கடன்களில் மிகமிக குறைவான தொகையே இந்த பகுதி யில் வழங்கி இருப்பீர்கள். வழக்க மாக கடன்கள் மீது வங்கிகள் மேற் கொள்ளும் கடன் திருப்பி செலுத்தும் கால அவகாசம் நீட்டிப்போ, வட்டியில் தளர்வு வழங்குவதோ இப்பகுதிக்கு நிவாரணம் ஆகாது. கடன் எடுத்த பலரும் இப்போது இல்லை. எனவே அந்த பகுதியில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்வதே வழியாகும். தள்ளுபடி செய்வதை அரசு தரவேண்டும் என்கிற நிலைபாடு சாதார ணமாக வங்கிகள் மேற்கொள்வதுண்டு. இதில் அத்தகைய நிலைபாடு கூடாது. இந்த தொகை இங்குள்ள எந்த வங்கி யாலும் தாங்க முடியாத சுமை அல்ல.  இதில் ஒரு முன்மாதிரியான நடவ டிக்கையை கேரள மாநில கூட்டுறவு வங்கி (கேரள வங்கி) மேற்கொண்டது. அத்தகைய நிலைபாட்டை இதர வங்கிகளும் கடைப்பிடிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியும் இங்கு வந்துள்ளது. உரிய அனுமதியை உரிய இடங்களில் பெற்று  கடன் முழு வதும் ஒவ்வொரு வங்கியும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கிய நிவாரண நிதியிலிருந்து  இஎம்ஐ பிடித்தம் செய்த கேரள கிராமிய வங்கி முன்பு டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்

கல்பட்டா வயநாடு மாவட்டம் முண் டக்கை நிலச்சரிவில் பாதிக் கப்பட்டவர்களுக்கு வழங் கப்பட்ட அவசர நிதியுதவியை பறி முதல் செய்த கேரள கிராமிய வங்கி யின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கல்பற்றா கிராமிய வங்கியின் வட்டார அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை மக்களுக்கு மாநில அரசு அவசர நிதி யுதவியாக 10,000 ரூபாய் வழங்கி யது. இதை வங்கியின் கடன் பாக்கியில்  இருந்து இ.எம்.ஐ.ஆக ரூ.1500 முதல் ரூ.5000 வரை கிராமிய வங்கி பிடித்தம் செய்துள்ளது. இந்த விவகா ரம் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் அவர் தலையிட்டார். அப்போது வங்கியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை திரும்ப வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஆட்சிய ரின் உத்தரவு பிற அட்டவணைப்படுத் தப்பட்ட வங்கிகளுக்கும் பொருந்தும். பாதிக்கப்பட்ட மக்களின் முழு கட னையும் கேரள வங்கி தள்ளுபடி செய்தது முன்னுதாரணமாகி உள்ளது.