கொச்சி, ஜூன் 20- கொச்சியில் உள்ள இன்போபார்க் மையத்தில் பிரிகேட் குழுமத்துடன் இன்போபார்க் இணைந்து உலக வர்த்தக மையத்தின் மூன்றாவது கோபுரம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், தலைமைச் செயலாளர் டாக்டர். வி.வேணு, தகவல் தொழில் நுட்ப (ஐடி) செயலாளர் டாக்டர். ரத்தன் யு கேல்கர், இன்போ பார்க் சிஇஓ சுஷாந்த் குருந்தில், பிரிகேட் குழும செயல் தலைவர் எம்.ஆர். ஜெயசங்கர், இணை நிர்வாக இயக்குநர் நிருபா சங்கர் மற்றும் இன்போபார்க் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பில்டர் பிரிகேட் குரூப் மூன்றாவது கோபுரத்தை உருவாக்க உலக வர்த்தக மையத்துடன் இணைந்து செயல்படுகிறது. 1.55 ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகங்களுக்கு 2.6 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட இடம் கிடைக்கும். இதன் மூலம் 2,700 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படு கின்றன. மூன்றாவது கோபுரம் 6 மாடிகளில் கார் பார்க்கிங் உட்பட 16 மாடிகளைக் கொண்டிருக்கும். மூன்று ஆண்டுகளில் கட்டடம் கட்டி முடிக்கப்படும். செஸ் இல்லாத பகுதியில் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. இதன் மூலம் ரூ.150 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
2016ஆம் ஆண்டு முதல் இன்போ பார்க்கில் 583 புதிய நிறுவனங்கள் தொடங்கப் பட்டு, இதுவரை (நேர்முகமாகவும் மறை முகமாகவும்) 73,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. உலக வர்த்தக மையத்தின் மூன்றா வது கோபுரம் வருவதால், இன்போபார்க் கின் வளர்ச்சி மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பத் துறையில் கேரளாவின் வளர்ச்சியும் விரைவுபடுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தற்போது, பிரிகேட் குழுமத்தின் உலக வர்த்தக மைய திட்டத்தில், இன்போபார்க் கொச்சி பகுதி I இல் இரண்டு கோபுரங்கள் உள்ளன. மொத்தம் 7,70,000 சதுர அடி யில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல்வேறு நிறு வனங்களால் முழுமையாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கேபிஎம்ஜி, ஐபிஎம், யுஎஸ்டி, ஜெராக்ஸ், மைண்ட்கர்வ், வில்லி யம்ஸ், லீ அண்டு அஸ்பையர் போன்ற 37 நிறுவனங்களைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டவர்ஸ் ஏ மற்றும் பி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.