திருவனந்தபுரம், ஜன.11- கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) உதவும் வகையில், மேலும் ரூ.30 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளதாக கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த மாதம் கே.எஸ்.ஆர்.டி.சி-க்கு ரூ.121 கோடி வழங்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் கடந்த ஒன்பது மாதங்களுக்குள் கேஎஸ்ஆர்டிசிக்கு அரசு உதவியாக ரூ.1,380 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது ரூ.900 கோடியாகும்.
இரண்டாவது பினராயி அரசு கேஎஸ்ஆர்டிசிக்கு ரூ.5,084 கோடி இதுவரை ஒதுக்கியுள்ளது. ரூ.4,936 கோடியை முதல் பினராயி அரசு வழங்கி யது. ஏழரை ஆண்டுகளில் ரூ.10,020 கோடிகள் இரண்டு இ.ஜ.முன்னணி அரசாங்கங்களால் வழங்கப்பட்டுள்ளது என்றார்.