திருவனந்தபுரம் மலையாள திரைத்துறையில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொ டர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி சமர்ப்பித்த 24 பரிந்துரைகளையும் அமல்படுத்தும் பணி துவங்கி விட்ட தாககேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தெரி வித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “கேரளத்தில் சினிமா கொள்கை வகுக்க ஆலோசனை துவக்கப் படும். இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அம்மா, டபிள்யூசிசி போன்ற அனைத்து திரையுலக அமைப்புகளுடனும் பாலியல் துன் புறுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கேஎஸ்எப்டிசி தலைவர் ஷாஜி என். கருண் தலைமையில் சினிமா கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் திரையுலகின் முக்கிய பிரமுகர்களு டன் கலந்துரையாடினார்.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, நிபுணர் குழு அறிக்கை கள் மற்றும் பல்வேறு திரைப்பட அமைப்புகளின் கருத்துகளை உள்ளடக்கி கலந்தாய்வு (கான்கி ளேவ்) நடத்தப்படும். சினிமாத் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், தொழில்நுட்ப துறையை மேம்படுத்தவும் முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. பல்வேறு மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நீதியரசர் ஹேமா குழு சமர்ப்பித்த பரிந்துரைகள் சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.சினிமா துறையில் போஷ் ஆக்ட் (பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்கும் சட்டம்) செயல்படுத்துவதை அரசு உறுதி செய்யும். அதற்கான நடவடிக் கைகள் கலாச்சார துறை செய்து வருகிறது” என அவர் கூறினார்.
ஹேமா கமிட்டியும் இடது ஜனநாயக முன்னணி அரசும்
மலையாள திரையுலகில் எழுந்த பாலி யல் சுரண்டல் குறித்த குற்றச்சாட்டு களின் பின்னணியில் முதலாம் பினராயி விஜயன் அரசு 7 ஆண்டுகளுக்கு முன்பு நீதி பதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த குழுவின் முன்பு ஏராளமான பெண் திரைக்கலைஞர்கள் தங்க ளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். இதனால் அச்சமடைந்த ஒரு தரப்பினர் விசாரணைக்கு எதிராகவும், அறிக் கையை வெளியிடாமல் தடுக்கவும் பல்வேறு தந்திரங்களை நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் சட்ட ஆணையத்தின் மூலமும் மேற் கொண்டனர். நீதிமன்ற தடைகள் அனைத்தும் விலகிய உடன் திங்களன்று அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. கேரள அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்பினரும் திரையுலக பிர முகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அறிக்கையில் குற்றமிழைத்ததாக குறிப் பிடும் நபர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் என எழுத்தாளர் சாரா ஜோசப் கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் பி.கே.ஸ்ரீமதி,”கடந்த 8 ஆண்டுகளாக பினராயி அரசு மேற்கு வங்கத்தைப் போல் அல்லாமல் பெண்கள் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது எனவும், பாதிக்கப் படும் பெண்கள் புகார் அளிக்க தயங்கக் கூடாது” எனவும் அவர் தெரிவித்தார்.
சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந் தன்,”அரசின் ஆளுமைத் திறனால் அனைத்து தடைகளையும் கடந்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி உள்ளது. ஆணாதிக்க சமூத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது” என அவர் கூறினார்.