வயநாடு நிலச்சரிவு துயரத்தின் பாதிப்பில் இருந்து மீண்ட முண்டக்கை, சூரல்மலை பகுதி மாணவ-மாணவிகள் மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்பினர். சூரல்மலை பள்ளிகளின் மறுநுழைவு விழா தி்ங்களன்று காலை 10 மணிக்கு மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் நடைபெற்றது. (படம் : நிலச்சரிவில் முற்றிலும் அழிந்த முண்டக்கை ஜிஎல்பிஎஸ் மற்றும் வெள்ளர்மலை ஜிவிஎச்எஸ்எஸ் பள்ளிகள் புதுப்பொலிவுடன்)