states

img

கேரள ஆளுநர் மாளிகை முற்றுகை

திருவனந்தபுரம்,டிச. 6-        பல்கலைக்கழகங்களை  சங்பரி வார் மையங்களாக மாற்றும் கேரள ஆளுநரின் நடவடிக்கையை  கண்டித்து இந்திய மாணவர்  சங்கத்தி னர் (sfi) ராஜ்பவனை முற்றுகையிட்டனர்.

மாநிலம் தழுவிய  போராட்டத்தின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ராஜ்பவனை முற்றுகையிட்டனர்.

பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் ஆளுநர்  ஆரிப் முஹம்மது கான் ஆர்எஸ்எஸ் திட்டத்தின் செயல் பாட்டாளராக செயல்பட்டு வருகிறார்  என்று எஸ்எப்ஐ மாநிலச் செயலா ளர் ஆர்ஷோ தெரிவித்தார்.  பாஜக அலுவலகத்தில் இருந்து கே.சுரேந்திரன் எழுதிய பெயர்களை ஆளுநர் முன்மொழிகிறார் என்றார்.

போராட்டத்தின் போது   தடுப்பு களைத் தாண்டி சென்ற தொண்டர்கள் மீது போலீசார்  தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.