states

img

கேரளா:மேலும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசி கேட்டு மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கடிதம் 

கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மேலும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கேரளமுதல்வர் பினராயி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கேரளாவில் தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகள் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. கேரளாவிற்கு வழங்கப்பட்ட 56,84,360 தடுப்பூசிகளில் 48,24,505 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 


 

;