states

img

இடதுசாரி வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக ஆதரவு

திருவனந்தபுரம்,மார்ச் 9- இடதுசாரி வேட்பாளர்க ளுக்கு கேரளம் முழுவதும் பெரும் ஆதரவும், வரவேற் பும் கிடைத்து வருவதாக இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) ஒருங்கிணைப்பா ளர் இ.பி.ஜெயராஜன் தெரி வித்தார். 20 தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் நடந்து வருவதாகவும், இரண்டு முறை அனைத்து தொகுதிக ளிலும் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:  அனைத்து இடது ஜன நாயக முன்னணி வேட்பா ளர்களும் எதிர்பார்ப்புக ளைக் கடந்து ஆதரவை பெற்று வருகின்றனர். முதல் கட்டம் முதலே அனைத்து இடங்களிலும் எல்.டி.எஃப் வேட்பாளர்கள் முன்னிலை யில் உள்ளனர். கேரளத்தில் சாதகமான சூழ்நிலை உள்ளது. இதற்கு ‘புதிய கேரளம் அரங்கம்’ நிகழ்ச்சி பெரிதும் உதவியது. கேரள மக்கள் இடது ஜனநாயக முன்னணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

 இந்திய மக்களின் வாழ்வு ரிமையை பாஜக பறித்துள் ளது. கேரளத்தின் வளர்ச்சி யை அழிக்க பாஜக மேற் கொண்ட முயற்சிகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். இடதுசாரிக ளால் பாஜகவை எதிர்த்துப் போராட முடியும். மார்ச் இறுதிக்குள்  பூத் மாநாடுகள் நாடாளுமன்றத் தொகுதி மாநாடுகள் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவ டையும். 20 ஆம் தேதிக்குள் சட்டசபை தொகுதி மாநாடு களும், 25 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி அளவிலான மாநாடுகளும், மார்ச் மாத இறுதிக்குள் பூத் மாநாடுக ளும் முடிக்கப்படும்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸிடமி ருந்து பாதுகாக்க அனை த்துத் தரப்பு மக்களும் இடதுசாரிகளின் பின்னால் அணிதிரள வேண்டும்.  பூக்கோடு கல்லூரியில் நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். அதை ஒரு அமைப்பின் தலையில் கட்டிவிட முயற்சி நடக்கிறது. இதில் அனைத்து பிரிவு மாணவர்களும் அடங்குவர். உரிய விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்  என்று  கூறினார்.