திருவனந்தபுரம், ஜுலை 11- நீண்ட தூர ரயில்களில், பொதுப் பெட்டிகள் மற்றும் பயணிகள் ரயில்கள் முழுமையாக சீரமைக்கப்படாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். தற்போது இந்த புறக் கணிப்பு தென் பகுதிக்கு மட்டுமே உள் ளது. கோவிட் நெருக்கடிக்குப் பிறகு, அனைத்துத் துறைகளும் பழைய நிலைக்குத் திரும்பினாலும், ரயில்வே பொதுப் பெட்டிகளை முன்பதிவு செய்யப் பட்ட பெட்டிகளாக மாற்றுவது தொடர்கிறது. மீண்டும் இயக்கப்படும் பயணியர் ரயில்கள் (பாசஞ்சர்) விரைவு ரயில் களாக இயக்கப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சீசன் டிக்கெட்டு கள் அனுமதிக்கப்பட்டாலும் பயணி களிடம் பெரும் தொகையை வசூலித்து ஏமாற்றி வருகின்றனர். பகல் பய ணத்திற்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாததும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இது எப்போது அனுமதிக்கப்படும் என்று ரயில்வே அதி காரிகளுக்கும் தெரியவில்லை. அதி காரிகளின் கூற்றுப்படி, மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து தற்போது எந்த நடவடிக்கையும் இல்லை. மூத்த குடிமக்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பிரிவினருக்கான பயணச் சலுகைகளும் மீண்டும் வழங்கப்பட வில்லை. இதில், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் தற்போது சலுகை அளிக்கப் பட்டுள்ளது.