states

img

14,000 மெட்ரிக் டன் கச்சா முந்திரி இறக்குமதி

கொல்லம், மார்ச் 12-   மூலப்பொருள் வரத்து இல்லாத தால் மூடப்பட்ட ஆலைகள், முந்திரி வளர்ச்சிக் கழகம் கச்சா முந்திரி இறக்கு மதி செய்து வருவதைத் தொடர்ந்து மீண்டும்  திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால் தொழி லாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் திங்க ளன்று (மார்ச் 11) தொழிற்சாலை களுக்கு வந்தனர்.

இதுகுறித்து கேரள முந்திரி வளர்ச்சிக் கழக தலைவர் எஸ்.ஜெய மோகன் கூறுகையில், தான்சானியா வில் இருந்து 2000 மெட்ரிக் டன் கச்சா முந்திரியைக் கொண்டு முதல்கட்ட மாக தொழிற்சாலைகள்  இயக்கப்படு கின்றன. கானா மற்றும் ஐவரிகோஸ்ட்டில் இருந்து 12,000 மெட்ரிக் டன்கள் வருவதால் இந்த ஆண்டு தொடர்ந்து வேலை வழங்க முடியும். எல்டிஎப் அரசு முந்திரி தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதி யத்தை 23 சதவிகிதம் உயர்த்தியது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.  

கானாவில் இருந்து 5,000 மெட்ரிக் டன் கச்சா முந்திரி ஏப்ரல் தொட க்கத்தில் வந்து சேரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சீசன் இல்லாத தால், கச்சா முந்திரி வரத்தின்றி, தொழிற்சாலைகளில் நெருக்கடி ஏற்பட்டது. பலமுறை அழைப்பு விடுத்தும் யாரும் டெண்டரில் பங்கேற்கவில்லை. முந்திரி கார்ப்ப ரேஷன் மற்றும் கேபெக்ஸ் தொழிற்சா லைகளில் தொடர் வேலைவாய்ப்புக் காக 12,000 மெட்ரிக் டன் கச்சா முந்தி ரியை இ-டெண்டர் மூலம் கொள்முதல் செய்ய முந்திரி வாரியம் முடிவு செய்துள்ளது. ஐவரிகோஸ்ட்டில் கச்சா முந்திரி சீசன் தொடங்கும் நிலையில் கூடுதலாக 5,000 மெட்ரிக் டன் கச்சா  முந்திரிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டைப் போலவே,  2024 ஆம் ஆண்டிலும், தொழிலாளர் களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிற சலுகை களுடன் தொடர்ச்சியான வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படும். தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால், வரலாற்றில் இல்லாத அதிகபட்ச ஊதியம் கிடைக்கும். இதனுடன் மற்ற நன்மைகளும் அதிகரிக்கும். ஊதிய உயர்வு அமலுக்கு வரும்போது அனை த்து தொழிலாளர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வருமாறு வாரியத் தலைவர் எஸ்.ஜெயமோகன் கேட்டுக் கொண்டார்.