திருவனந்தபுரம், ஆக. 12 - கோவிட் அச்சத்தால் அனை வரும் வீட்டில் இருந்தபோது அவர் கள் தன்னார்வலர்களாக களத்தில் இருந்தனர். கேரளத்தை தொற்று நோயில் இருந்து மீட்டெடுக்க, அவர்கள் கூலி வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொடுத்தனர். இயற்கைச் சீற்றத்தால் சிதைந்த வய நாட்டைக் காப்பாற்றவும், மீண்டும் கட்டமைக்கவும் அனைவரும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். மற்றுமொரு சர்வதேச இளைஞர் தினத்தில் (ஆக.12) இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் உலகிற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை கையில் எடுக்கும் வாலிபர் சங்கம், தேசத்திற் காக அர்ப்பணிப்புள்ள ஒரு தலை முறையை உருவாக்குவதையும் நிரூபித்து வருகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் அவர்கள் ஆக்ரி (பழைய பொருட்கள்) எடுத்த போது மற்ற அமைப்புகள் அவர் களை கேலி செய்தன. ‘ஆக்ரி பொறுக்கி களே இது தான் உங்க ளுக்கு பொருத்தமான வேலை’ என்று ஏளனம் செய்தனர். ஆனால் சோர்வடையவில்லை. மீன் விற்றும், கல் சுமந்தும், ஊறுகாய் செய்தும் 11 கோடி ரூபாய்க்கு மேல் முதலமைச் சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த போது ஏளனம் செய்த வர்கள் கூட கைதட்டவேண்டியதாயிற்று.
‘இருதயபூர்வம்’ என்னும் பொதிச்சோறு (உணவுப் பொட்ட லம்) திட்டத்தின் மூலம், தினமும் பல்லாயிரக்கணக்கானோரின் பசிக்கு உணவளித்து வருகின்றனர். இயற்கைப் பேரிடரில் தத்தளிக்கும் வயநாட்டிற்கு வாலிபர் சங்கத்தால் உதவ முடிகிறது. இரவும் பகலும், தன்னுயிரை துச்சமெனக் கருதி, அனைத்தையும் இழந்தவர்களின் கரம் பற்றி உயர்த்தும் பணியை மேற் கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதி யாக, ‘வயநாட்டை மீண்டும் கட்டி யெழுப்புவோம்’ (ரீபில்டு வய நாடு) என்ற முழக்கத்துடன், பேரிடர் பாதித்தவர்களுக்கு, 25 வீடுகள் கட்டித் தர பல்வேறு பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன. இந்த இளைஞர் தினத்தில் முன்னுதாரண மாகச் சுட்டிக் காட்டக்கூடிய ஓர் அமைப்பே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.