திருவனந்தபுரம், ஜூலை 8- கேரளத்தில் தேசிய நெடுஞ் சாலை 66 மேம்பாடு முடியும் தருவா யில் உள்ளது. 2025 டிசம்பரில், 17 ரீச் (திட்டப் பகுதிகள்) கட்டும் பணி முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் பணி முடிவடையும் போது, சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
முக்கோலா – கழக்கூட்டம், காரோடு – முக்கோலா, கழக்கூட் டம் மேம்பாலம், நீலேஸ்வரம் டவுன் சுற்றுச்சாலை, தலச்சேரி – மாஹி பைபாஸ் மற்றும் முரடு – பாலோலி பாலம் ஆகியவை போக்குவரத்துக்காக ஏற்கனவே திறக்கப்பட்டன. வாலாஞ்சேரி-கபிரிக்காடு வரையிலான கட்டு மானப் பணியும் 85 சதவிகிதத்தை எட்டியுள்ளது. ராமநாட்டுக்கரை- வாலாஞ்சேரி ரீச் 75 சதவிகிதம் நிறை வடைந்துள்ளது, தாளப்பாடி-செம்மலா ரீச் 74 சதவிகிதம், வேமளம் சந்திப்பு– ராமநாட்டுக்கரை 73 சதவிகிதம் முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரு கின்றன.
யுடிஎப் கைவிட்ட திட்டம்
இதர பகுதிகளில் 40 முதல் 60 சதவிகித கட்டுமானப் பணிகள் நட ந்துள்ளன. பணிகளின் வேகத்தை அதிகரிக்க, கேரள அரசு “மிஷன் 2025” என்ற திட்டத்தை உருவாக்கி, அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் தலைமையில், நேரடி ஆய்வு மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிடுவற் ்கான பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளி லாக சுமார் 300 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு என்பது யு.டி.எப் ஆட்சியில் நிலம் கையகப் படுத்தப்படாததால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கை விடப்பட்ட திட்டமாகும். தேசிய நெடுஞ்சாலை-66ஐ மேம்படுத்து வதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் எல்டிஎப் அரசாங்கம் மொத்தம் ரூ.5,580 கோடியை வழங்கியுள்ளது.
காசர்கோடு தாளப்பாடி முதல் திருவனந்தபுரம் கரோடு வரையிலான 643.29 கிமீ ஆறுவழிச் சாலை மாநிலத்தின் வளர்ச்சித் திறனை மாற்றும். பிரதான சாலை யில் எங்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இருக்காது. பிரதான சாலையில் செல்லும் வாகனங்கள் சுங்கச் சாவடிகளைத் தவிர வேறு எந்த தடையையும் எதிர்கொள்ளாது கடந்து செல்ல முடியும்.
குமரியில் மந்தகதி
மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை என்.எச் 66 இணைக்கிறது. இது முந்தைய என்.எச் 47, 17, 204 ஆகியவற்றை இணைத்து மகாராஷ்டிராவின் பன்வால்- தமிழகத்தின் கன்னியாகுமரி இடையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் நீளமான என்.எச் 44 (ஜம்மு-காஷ்மீர்- கன்னியாகுமரி) உடன் கன்னியாகுமரியில் இந்த சாலை இணைகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 66 கிலோ மீட்டர் பணிகள் மந்தகதியில் நடப்பது தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் பெரும் இழப்பாகும்.