states

img

வயநாட்டில் தேசிய புவி அறிவியல் மைய நிபுணர்கள் ஆய்வு

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய தேசிய புவி அறி வியல் மையத்தின் நிபுணர்கள் குழு,  மூத்த விஞ்ஞானி ஜான் மத்தாய் தலை மையில் செவ்வாயன்று வயநாட்டிற்கு வருகை தந்தது. நீர் தொடர்பான பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு மையத் தலைவர் டாக்டர் திரிஷ்யா டி.கே., சூரத்கல் என்ஐடி பொறியியல் துறை இணைப் பேராசிரியர் ஸ்ரீவத்சா, வய நாடு மாவட்ட மண் ்பாதுகாப்பு அதிகாரி தாரா மனோகரன், கேஎஸ்டிஎம்ஏ பிரதிநிதி பிரதீப் ஜி.எஸ், கேஎஸ்இஓசி ஜிஐஎஸ் தொழில்நுட்ப வல்லுநர் ஏ. ஷினு ஆகி யோர் குழுவில் இடம் பெற்றுள்ள நிலையில், முதல்கட்டமாக சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளை பார் வையிட்டனர். “பாதுகாப்பான பகுதிகள் எவை, பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் எவை,  மேலும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதா என ஆய்வு  செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என ஜான் மத்தாய் தகவல் தெரிவித்தார்.