states

img

சைக்கிள் போலோ தேசிய வீராங்கனை பாத்திமா நிதாஸ் ஷிஹாபுதீன் உடல் சொந்த ஊரில் அடக்கம்

ஆலப்புழா, டிச.26- நாட்டின் பிஞ்சு விளையாட்டு நட்சத்திரம் பத்து வயது பாத்திமா நிதா ஸின் உடலுக்கு  டிச.25 ஞாயிறன்று சொந்த ஊரில் இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஷிஹாபுதீன்-அன்சிலா தம்பதியின் மகள் பாத்திமா நிதாஸின் சடலம் அவ ரது குடும்ப இல்லமான காகழம் ஏழர பீடிகை சுஹராமன்சிற்கு கொண்டு வரப்பட்டு 11.30 மணியளவில் காக்கா மம் ஜும்ஆ மசூதி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் பி.பிரசாத், நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.எம்.ஆரிப், சட்ட மன்ற உறுப்பினர்கள் எச்.சலாம், பி.பி. சித்தரஞ்சன், ஆட்சியர் வி.ஆர்.கிரு ஷ்ண தேஜா, துணை ஆட்சியர் எஸ்.சந்தோஷ்குமார், மாநில விளையாட்டு கவுன்சில் தலைவர் மெர்சி குட்டன், துணை தலைவர் ஓ.கே.வினீஸ், மாவட்ட தலைவர் பி.ஜே.ஜோசப் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

தங்கும் வசதியும் உணவும் மறுப்பு

நீதிமன்ற உத்தரவுப்படி பாத்திமா உள்ளிட்ட குழுவினர் போட்டியில் பங்கேற்க நாக்பூர் வந்தனர். தேசிய கூட்டமைப்பு இவர்களுக்கு தங்கும் வசதியும் உணவும் வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவு போட்டி போடு வதற்கு மட்டுமே உள்ளது. மற்ற வசதி களை செய்து தர இயலாது என்ற நிலைப் பாட்டை கூட்டமைப்பு மேற்கொண்ட தாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாத்திமா குழுவினர் கடந்த 18.12.2022 அன்று  பயிற்சியாளருடன் புறப்பட்டனர். புதனன்று (டிச.21) நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகி லுள்ள ஒரு கடையில் இருந்து உணவு  வாங்கி சாப்பிட்டுள்ளார். இரவில்  கடுமையான வாந்தி ஏற்பட்டது. வியாழன் காலை மீண்டும் உடல்நிலை  சரியில்லாத நிலையில், அருகிலுள்ள கிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால்  அவரது உடல்நிலை மோசமடைந்த தால் அவர் வெண்டிலேட்டருக்கு மாற்றப் பட்டார். ஆனால் அவரைகாப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியமே உயிரி ழப்புக்கு காரணம் என்றும் கூறப்படு கிறது. சொந்த ஊரிற்கு கொண்டுவரப் பட்ட பாத்திமா நிதாஸின் உட லுக்கு அஞ்சலி செலுத்த வந்த சக மாண விகளும், வீராங்கனைகளும் கண்ணீ ரால் பிரியாவிடை கொடுத்தனர். பாத்திமா நிதாஸ் மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர்  ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏ.எம் ஆரிப்  எம்பி  ஞாயிறன்று கடிதம் எழுதியிருந் தார். மக்களையில் இதுகுறித்து அவசர தீர்மானமாக விவாதிக்க வேண்டும் எனவும் அவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.