நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்காக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கேரள மாநிலக் குழு இரண்டாம் தவணையாக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.23 லட்சம் நிவாரணத்தொகையை வழங்கியது. முன்னதாக மாதர் சங்கத்தின் கேரள மாநிலக் குழு முதற்கட்டமாக ரூ.35 லட்சத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.