கொச்சி கடந்த 2019இல் நடிகர் சித்திக் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை ரேவதி சம்பத் தெரிவித்து, இது தொடர்பாக நடிகை ஒரு முகநூல் பதி வையும் வெளியிட்டார். இதே போன்று திரைப் பட அகாடமி தலைவரும், இயக்குநருமான ரஞ்சித் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட தாக மேற்குவங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்துள்ளார்.
இந்த புகார்களை அடுத்து நடிகர் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இதில் சித்திக் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறப் பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து திரைப்பட அகாடமி தலைவர் பதவி யில் இருந்து ரஞ்சித்தும், “அம்மா” என்னும் அனைத்து மலையாள திரைக்கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக்கும் ராஜினாமா செய்தனர்.
மோகன்லாலுக்கு கடிதம்
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து “அம்மா” அமைப்பின் தலை வர் மோகன்லாலுக்கு மின்னஞ்சல் மூலம் சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில்,“என் மீதான குற்றச்சாட்டு களை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதனால் “அம்மா” அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தானாக முன்வந்து ராஜி னாமா செய்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மற்ற மொழிகளிலும் “ஹேமா” போன்ற கமிட்டிகள் வேண்டும்
சித்திக்கை போன்று திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து ஓட்டம் பிடித் துள்ள இயக்குனர் ரஞ்சித்தின் ராஜிநாமா கடி தம் மின்னஞ்சல் மூலம் கேரள அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்துள்ள மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா கூறுகையில்,”பாலியல் வன் முறையை எதிர்கொண்டவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும். குற்றவாளி களின் பெயர்களை வெளியிட வேண்டும். மற்ற மொழிகளிலும் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டிகள் அமைக்க வேண்டும்” என அவர் கூறினார்.
கடும் நடவடிக்கை தேவை: நடிகை ஊர்வசி
இதனிடையே நடிகை ஊர்வசி,”நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மீது நடிகர் சங்க மான “அம்மா” அமைப்பு வலுவான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும். “அம்மா” அமைப்பின் செயற்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும். நீதிபதி ஹேமா கமிட்டி உறுப்பினர்களிடம் கருத்து கேட்க வேண்டும். உறுப்பினர்களைத் தடைசெய்யும் அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு, அவர்கள் பிரச்சனை யில் சிக்கும்போது அவர்களுக்குத் துணை நிற்கவும் தயாராகவே இருக்க வேண்டும். அறிக்கையை ஆய்வு செய்தால் போதும். ஒரு வலுவான நிலைப்பாடு உடனடியாக தெளிவுபடுத்தப்பட வேண்டும். நான் எப்போ தும் இந்த பெண்களுடன் இருப்பேன். அறிக்கையில் உள்ள தகவல்கள் மிகவும் தீவிரமானவை. கண்ணியத்துடன் பலர் பணி புரியும் துறை இது. எல்லோரும் கெட்ட வர்கள் அல்ல. எனவே உண்மையை வெளிக் கொண்டு வந்து, குற்றவாளிகளை தண்டிக்க, ‘அம்மா’ அமைப்பு தான் முன்வர வேண்டும்” என அவர் கூறினார்.
சித்திக், ரஞ்சித் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பாஜக
நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிக மோச மான அளவில் அரங்கேறி வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாலியல் குற்ற வாளிகளை பாஜகவே காப்பாற்றி வருகிறது. மல்யுத்த வீரா ங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.பி., பிரிஜ் பூஷண் இன்னும் கைது செய்யப்படாமல் அவர் சுதந்திரமாகவும், இன்னும் மல்யுத்த சம்மேள னத்தில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு இவ்வாறு உள்ள நிலையில், இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரள அரசோ பாலியல் குற்றங்களை ஆராய நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைத்து பாலியல் குற்றவாளிகளான திரைக்கலைஞர்கள் சித்திக், ரஞ்சித் ஆகியோரை திரைத்துறை உயர்பதவிகளில் இருந்து விரட்டியடித்துள்ளது.