திருவனந்தபுரம் கேரள உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகளில் கொல்லம் மாவட்டத்தில் 6இல் 4 பஞ்சாயத்து வார்டுகளை கைப் பற்றிய எல்டிஎப் அபார வெற்றி பெற்றுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து திருக்கலங்கோடு வார்டு உட்பட 11 மாவட்டங்களில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மூன்று நகராட்சி வார்டுகள் மற்றும் 23 கிராம பஞ்சாயத்து வார்டுகள் என 31 இடங்க ளுக்கான இடைத்தேர்தல் செவ்வா யன்று (டிச.10) நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 44,262 ஆண்கள், 49,191 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 93,454 பேர் (61.87 சதவிகிதம்) வாக்களித்ததாக மாநில தேர்தல் ஆணை யர் ஷாஜகான் தெரிவித்தார்.
இந்நிலையில், பதிவான வாக்குகள் புதனன்று எண்ணி முடிவுகள் அறி விக்கப்பட்டன. அதன்படி கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற 6 கிராம பஞ்சா யத்து வார்டுகளுக்கான தேர்தலில் 4இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அபார வெற்றி பெற்றது. இம்மாவட்டத்தில் யுடிஎப் மற்றும் பாஜகவிடம் இருந்த இடங்களை எல்டிஎப் கைப்பற்றியுள்ளது. மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து திருக்கலங்கோடு பிரிவில் யுடிஎப் வேட்பாளர் என்.எம்.ராஜன் வெற்றி பெற்றார். யுடிஎப் உறுப்பி னரின் மறைவைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
கேரளத்தில் உள்ள 31 உள்ளாட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்த லில் எல்டிஎப் 11 இடங்களிலும், யுடிஎப் 16 இடங்களிலும், என்டிஏ 3 இடங்களி லும் வெற்றி பெற்றன. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.