கேரள அரசின் மீது அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கேரளத்தில் ஏற்பட போகும் பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஒன்றிய அரசு முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறியிருந்தார்.
முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும், கேரள அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அமித்ஷாவின் குற்றச்சாடிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இந்திய வானிலை மையம் அறிவித்த மழையின் அளவை விட அதிகனமழையே பெய்தது. அதுமட்டுமின்றி, பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட பின்பே, காலை 6 மணியளவில்தான் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.