நீட் முறைக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவையில் இடது ஜனநாயக முன்னணியை சேர்ந்த எம்.எல்.ஏ எம்.எம்.விஜின் கொண்டுவந்தார். இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு தெரிவித்தனர். இதை அடுத்து, நீட் முறைக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.