states

img

இளஞ்சிவப்பு நிறத்தில் மிளிர்ந்த காசர்கோடு

கேரள மாநிலம் காசர்கோட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வியாழனன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தொடங்கி வைத்து சிறப்பு உரையாற்றினார். இந்த விழாவில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியாக இளஞ்சிவப்பு நிற உடையை உடுத்தி இருந்ததால் விழா நடைபெற்ற இடம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் மிளிர்ந்தது.