திருவனந்தபுரம் கேரளத்தில் இடது ஜன நாயக முன்னணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு நான்காவது நூறு நாள் செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசின் மூன்றாம் ஆண்டு நிறை வையொட்டி, அக்டோபர் 22ஆம் தேதி வரை 47 துறைகளில் ரூ. 13,013.40 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதில் 1070 திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் 2,59,384 வேலை வாய்ப்புகளும் இலக்கு வைக் கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக் கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளும் செயல் திட்டத்தில் உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். வாழ்வாதாரத்துக்கும் அடிப்படை வசதிகள் மேம்பாட் டுக்குமான திட்டங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கால அளவில், கட்டி முடிக்கப்பட்ட 706 திட்டங்கள் துவக்கப்படும். 364 திட்டத்தின் கட்டுமானம் துவக்கி வைக்கப்படும். 761.93 கோடியில் கட்டப்பட்ட 63 சாலைகள், 28.28 கோடியில் 11 கட்டிடங்கள், 90.91 கோடியில் 9 பாலங்கள் உள்ளிட்ட முடிக் கப்பட்ட திட்டப்பணிகள் திறந்து வைக்கப்படும். 437.21 ரூபாயில் 24 சாலைகள், 81.74 கோடியில் 17 கட்டிடங்கள், 77.94 கோடி யில் ஒன்பது பாலங்கள் பணி துவக்கி வைக்கப்படும். 30,000 பட்டாக்கள் விநியோகிக் கப்படும். 37 ஸ்மார்ட் கிராம அலு வலகங்கள் கட்டி முடிக்கப் படும். 29 ஸ்மார்ட் கிராம அலுவலகங்கள் கட்டுமானப் பணிகள் துவக்கப்படும். 456 ரேசன் கடைகளும் புதுப்பிக்கப் படும். புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் மருந்துகள் போன்றவை லாபமின்றி 10,000 வீடுகளில் காருண்யா சமூக மருந்தகம் மூலம் வழங்கப்படும். கோட்டயத்தில் அக்ஷரா டூரிசம் ஹப், திருவனந்தபுரத்தில் சோலார் சிட்டி, பூஜப்புரயில் மகளிர் பாலிடெக்னிக், முழப்பி லாங்காடு-தர்மடம் கடற்கரை மேம்பாடு, ஸ்ரீ நாராயண குரு டிஜிட்டல் மியூசியம் கட்டி முடிக்கப்படும். நூறுநாள் செயல் திட்டப் பணி குறித்த தகவல் மற்றும் முன்னேற்றம் https://100days.kerala.gov.in என்கிற இணைய தளத்தில் தெரிந்து கொள்ள லாம்.