திருவனந்தபுரம், ஜுன் 30- கேரளத்தில் புற்றுநோய் சிகிச்சை க்கான மருந்துகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு பயன்படுத்தப்படும் மருந்துகள் போன்ற விலை உயர்ந்த மருந்துகள் கேரளத்தில் குறைந்த விலையில் நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச் சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கேரள அரசு புற்று நோய் மருந்து சந்தையில் தீவிர தலை யீடு செய்து வருகிறது. மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி விலையில் சுமார் 800 வகையான மருந்துகள் கேரளத்தில் கிடைக் கின்றன.
குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பது நோயாளிகளுக்கு பெரும் நிவாரணமாக உள்ளது. விலை உயர்ந்த மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். மாநில அரசின் கேரள மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (KMSCL) காருண்யா மருந்தகங்கள் மூலம் மருந்துகள் குறைந்த விலை யில் கிடைக்கும். இதற்காக காருண்யா மருந்தகங்களில் ‘லாப மில்லா கவுன்டர்கள்’ தொடங்கப் படும். இத்திட்டத்தை ஜூலை மாதத் தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது மாநிலத்தில் 74 காருண்யா மருந்தகங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள பல்வேறு பிராண்டட் நிறுவனங்களின் சுமார் 7 ஆயிரம் மருந்துகள் காருண்யா மருந்தகங்களால் குறைந்த விலை யில் வழங்கப்படுகின்றன. இது தவிர புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான மருந்துகள் முற்றி லும் லாபமின்றி வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய காருண்யா மருந்தகங்கள் மூலம் லாப நோக்கமற்ற கவுண்டர் கள் தொடங்கப்படும். இதற்காக சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அனைத்து மருத்துவமனைகளிலும் புற்றுநோய் பரிசோதனை
புற்றுநோய் சிகிச்சை மற்றும் தடுப்புத் துறையில் அரசு பெரிய தலையீடுகளை மேற்கொண்டு வரு கிறது. மாநிலத்தில் முதன்முறை யாக ஆர்சிசி மற்றும் எம்சிசியில் புற்றுநோய்க்கான ரோபோ அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. முக்கிய மருத்துவமனைகள் தவிர, 25 இதர மருத்துவமனைகளில் புற்று நோய் சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மலபார் புற்றுநோய் மையம் கிப்பி நிதி ரூ. 562.25 கோடியுடன் புற்றுநோயியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் முதுநிலை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் வாரத்தில் ஒரு நாள் புற்றுநோய் பரிசோதனை தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஒரு ஆண்டில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை உறுதி செய்யப்பட்டது. கேன்சர் ஸ்கிரீனிங் போர்டல் மற்றும் கேன்சர் கிரிட் செயல்படுத்தப் பட்டது. இதனுடன், குறைந்த விலை யில் புற்றுநோய் மருந்துகள் கிடைப்பதன் மூலம், மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை முறைகள் சாதா ரண மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.