states

img

பங்குத் தந்தை தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள்.... செபிக்கு ஆயுள் தண்டனை... சகோதரி அபயா கொலை வழக்கில் தீர்ப்பு ....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சகோதரி அபயா கொலை வழக்கில் பங்குத் தந்தைதாமஸ் கோட்டூருக்கு இரட்டைஆயுளும்,  சகோதரி செபிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்தது.

அபயா கொலை வழக்கு புதனன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பைக் கேட்க குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு காலையில் கொண்டு வரப்பட்டனர்.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வாதிட்டது. வயது மற்றும் புற்றுநோயைக் கருத்தில் கொண்டு அதிகபட்ச தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் தனக்கு சிறுநீரக பாதிப்பும் நீரிழிவு நோயும் இருப்பதாகவும், தான் நிரபராதி என்றும் தாமஸ் கோட்டூர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதுபோல் செபி தனது வயதான பெற்றோர் ஆதரவற்றவர்கள் ஆகிவிடுவார்கள் எனக்கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் நீதிபதி கே.சுனில்குமார், எழுதிப் படித்த தீர்ப்பில்  தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுளும் ஆறரை லட்சம் ரூபாய் அபராதமும், செபிக்கு ஆயுள் தண்டனையும் ஐந்து லட்சம்ரூபாய் அபராதமும்  விதித்து உத்தரவிட்டார்.சகோதரி அபயா கொலை செய்யப்பட்டு 28 வருட சட்டப் போருக்குப் பிறகு வெளியாகி உள்ள தீர்ப்பாகும் இது. அபயா கொலை வழக்கில்முதல் குற்றவாளியான பங்குத் தந்தை தாமஸ் கோட்டூர், மூன்றாவது குற்றவாளியான சகோதரி செபி ஆகியோரை நீதிமன்றம் செவ்வாயன்று குற்றவாளிகளாக தீர்ப்பளித்தது. இரண்டாவது குற்றவாளி யான தந்தை ஜோஸ் புத்ரிகலை நீதிமன்றம் ஏற்கனவே விடுவித்தது.

கோவிட் பரிசோதனைக்குப் பிறகு, தந்தை தாமஸ் கோட்டூர் பூஜாப்புரா மத்திய சிறையிலும், சகோதரி செபி அத்தக்குளங்கர மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.மார்ச் 27, 1992 அன்று, அபயா மர்மமான சூழ்நிலையில் பியூஸ்கோ டெண்ட் கான்வென்ட்டில்ஒரு கிணற்றில் இறந்து கிடந்தார். உள்ளூர் காவல்துறையும், குற்றப்பிரிவு போலீசும் விசாரித்து தற்கொலை வழக்காக கூறி கைவிட்டனர். நீதிமன்ற உத்தர வைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி)விசாரணை நடத்தியது. அதில் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ரிகல்,சகோதரி செபி ஆகியோருக்கு இடையிலான சட்டவிரோத விவகாரம் தான் இந்தக் கொலைக்குப் பின்னால் இருந்ததாக சிபிஐ கண்டறிந்தது. குற்றப்பத்திரிகையின் படி, அபயா கோடரி கைப்பிடியால் தலையில் தாக்கப்பட்டு மயக்கமடைந்ததும் கிணற்றில் வீசப்பட்டார் என சிபிஐ தெரிவித்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை சிபிஐ கொச்சி பிரிவு டி.எஸ்.பி நந்தகுமார் நாயர் ஜூலை 17, 2009 அன்று எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆகஸ்ட் 26, 2019 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 133 அரசு தரப்பு சாட்சிகளில் 49 பேர் விசாரிக்கப்பட்டனர். பத்து பேர் மனம் மாறினர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட திருடன்ராஜூ, செபி தனது கன்னித் தோலை செயற்கையாக பொருத்தினார் என்று கூறிய மருத்துவர்கள் ஆகியோரின் கூற்றுகள் தீர்க்கமானவை. சிபிஐ தரப்பில் வழக்கறி ஞர் எம்.நவாஸ் ஆஜரானார்.