கோழிக்கோடு, பிப். 20- கேரளத்தை அறிவுப் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்லும் புதிய திசைகள் மற்றும் முடிவுகளுடன் மாணவர் களுடனான முதலமைச்சர் பினராயி விஜயனின் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. கேரள உயர்கல்வித் துறை வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு தயாராகி வருவதை விவாதம் வெளிப்படுத்தியது. புதிய தலைமுறையினரின் கருத்துக்களைக் கவனமாகக் கேட்டறிந்த முதலமைச்சர் பினராயி விஜயன், அவர்களுக்குத் துல்லியமான பார்வையுடன் பதிலளித்தார்.
அரசின் ‘புதிய கேரளம்’ குறித்த தமது பார்வையை மாணவர் களுடன் பகிர்ந்து கொண்டார். 60 பேர் முதலமைச்சருடன் நேரடியாக உரையாடினர். மற்றவர்கள் எழுதிக் கொடுத்தார்கள். ஒன்றிய அரசின் இ-ஸ்காலர்ஷிப் ரத்து குறித்து பல கேள்விகள் எழுந்தன.
ஆனால், அதற்கு மாற்று அமைப்பை மாநில அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் கூறியது, அந்த கவலையையும் போக்கியது. நான்காண்டு பட்டயப் படிப்பு நடைமுறைக்கு வந்த வுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பெருமளவில் மாறும் என்றும் வேலை சார்ந்த கல்வி ஊக்குவிக்கப்படும்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நானோ தொழில்நுட்பம், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், மரபணு ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மையங்களும் தொடங்கப்படும்; உயர்கல்வி தொடர்பான அனைத்து தகவல்களும் விரல் நுனியில் கிடைக்கும் வகையில் அதற்கான மென்பொருள் விரைவில் நடை முறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
மலபார் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். கல வரத்தின் போது மணிப்பூர் மாணவர்களின் கல்வி தடைபட்ட நிலையில் கல்வி வசதியை ஏற்படுத்தி தந்தமைக்காக நன்றி தெரிவிக்க அம்மாணவர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தலைமை வகித்தார். அமைச்சர்கள், பிற மக்கள் பிரதி நிதிகள், துணைவேந்தர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.